Muslim Library

Surah Ash-Shams ( The Sun )

தமிழ்

Surah Ash-Shams ( The Sun ) - Aya count 15
Facebook Twitter Google+ Pinterest Reddit StumbleUpon Linkedin Tumblr Google Bookmarks Email
وَالشَّمْسِ وَضُحَاهَا ( 1 ) Ash-Shams ( The Sun ) - Aya 1
சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக
وَالْقَمَرِ إِذَا تَلَاهَا ( 2 ) Ash-Shams ( The Sun ) - Aya 2
(பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-
وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا ( 3 ) Ash-Shams ( The Sun ) - Aya 3
(சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக-
وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا ( 4 ) Ash-Shams ( The Sun ) - Aya 4
(அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-
وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا ( 5 ) Ash-Shams ( The Sun ) - Aya 5
வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைந்திருப்பதின் மீதும் சத்தியமாக-
وَالْأَرْضِ وَمَا طَحَاهَا ( 6 ) Ash-Shams ( The Sun ) - Aya 6
பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-
وَنَفْسٍ وَمَا سَوَّاهَا ( 7 ) Ash-Shams ( The Sun ) - Aya 7
ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-
فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا ( 8 ) Ash-Shams ( The Sun ) - Aya 8
அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.
قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا ( 9 ) Ash-Shams ( The Sun ) - Aya 9
அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.
وَقَدْ خَابَ مَن دَسَّاهَا ( 10 ) Ash-Shams ( The Sun ) - Aya 10
ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.
كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَاهَا ( 11 ) Ash-Shams ( The Sun ) - Aya 11
'ஸமூது' (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர்.
إِذِ انبَعَثَ أَشْقَاهَا ( 12 ) Ash-Shams ( The Sun ) - Aya 12
அவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன் வந்தபோது,
فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ نَاقَةَ اللَّهِ وَسُقْيَاهَا ( 13 ) Ash-Shams ( The Sun ) - Aya 13
அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: "இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது, இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்" என்று கூறினார்.
فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنبِهِمْ فَسَوَّاهَا ( 14 ) Ash-Shams ( The Sun ) - Aya 14
ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.
وَلَا يَخَافُ عُقْبَاهَا ( 15 ) Ash-Shams ( The Sun ) - Aya 15
அதன் முடிவைப் பற்றி அவன் பயப்படவில்லை.
Facebook Twitter Google+ Pinterest Reddit StumbleUpon Linkedin Tumblr Google Bookmarks Email

Select language

Select surah